வேத கணிதமானது மிக வேகமான கணக்கீட்டு முறையாகும். இதன் மூலமாக
வழக்கமான முறையைவிட பத்து மடங்கு வேகமாக கணக்கீடு செய்ய
முடியும்.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருக்குறள்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருக்குறள்
திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கணிதத்தின்
முக்கியதுவத்தை பறைசாற்றியுள்ளார். பழையகால இந்தியா, எண்களை எழுதுவதில்
இடமதிப்புத் திட்டத்தையும், பூஜ்ஜியம் என்ற கருத்தையும் உருவாக்கி
வருங்காலக்கணிதக்குறியீட்டு முறைக்கு அடிகோலிட்டது.
வேத கணிதத்தின் தந்தை என்று போற்றப்படும் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா
தீர்த்த சுவாமியால்(Swami Bharati Krishna Tirthaji) 16
முதன்மை சூத்திரங்களும், 13 துணை சூத்திரங்களும் உருவாக்கப்பட்டது.
இந்த சூத்திரங்கள் மூலமாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்,
வர்கம், வர்கமூலம், கணம், கணமூலம், சிக்கலெண்கள், வகுபடுந்தன்மை,
இயற்கணிதம், நுண்கணிதம், வகையீட்டு நுண்கணிதம், இருபடி சமன்பாடு,
திரிகோணமிதி, பிதாகரஸ் தேற்றம், அப்போலோனியஸ் தேற்றம் போன்றவற்றை
மிகக் குறைந்த நேரத்தில் விரைவாக விடை காண முடியும்.
வேத கணிதத்தின் நன்மைகள்
- எளிமையானது
- மிகப்பெரிய கணக்குகளை சுலபமாக தீர்க்க
- துல்லியமான விடை
- மனகணக்காகவே விடை கானலாம்
- மிக விரைவானது
- நேரடி
ஸ்ரீ பாரதி கிருஷ்ணா தீர்த்த சுவாமி அவர்களின் இயற்பெயர் வெங்கடராம
சாஸ்திரியாகும். இவர் 1884 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி, "திக்கெல்லாம்
புகழுறும் திருநெல்வேலி" என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு"
என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி"
என்று கம்பரும் பாடிய பூமியாகிய தமிழ் நாட்டிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில்
அமைந்துள்ள திருநெல்வேலியில் பிறந்தார்.
ஸ்ரீ பாரதி கிருஷ்ணா தீர்தாஜியின் குடும்பத்தில் அனைவரும் மிகவும்
படித்தவர்களாகவும், அரசு உயர்பதவிகள் வகித்தவர்களாகவும் இருந்துள்ளனர்.
இவர் தந்தை பி.நரசிம்ம சாஸ்திரி தாசில்தாராகவும் பின்னர் துணை
வட்டாட்சியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
ஸ்ரீ பாரதி கிருஷ்ணா தீர்த்த சுவாமி அவர்கள் இளமையிலேயே மிகவும்
புத்தி கூர்மையாகவும் படிப்பில் மெச்சும்படியாகவும் விளங்கினார்.
இவருடைய படிப்பு காலம் முழுவதும் எல்லா பாடத்திலும் முதல் மாணவனாகவே
இருந்தார். சமஸ்கிருதத்தில் இவருடைய அசாதாரண திறமையைப் பாராட்டி
ஜுலை 1899 ஆம் ஆண்டு சென்னை சமஸ்கிருத கூட்டமைப்பு (Madras Sanskrit
Association) "சரஸ்வதி" என்ற பட்டத்தை கொடுத்து கவுரவித்தது,
அப்போது அவருடைய வயது பதினாறுதான்.
சுவாமி அவர்கள் முதுநிலை படிப்பை முடித்ததும் சிறிதுகாலம் கணித
பேராசிரியராகவும் பின்னர் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.
பிறகு ஸ்ரீ சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமி அவர்களிடம் சுமார்
எட்டு வருடங்கள் உடனிருந்து வேதாந்தத்தை பற்றிய ஆழமான அறிவைப்
பெற்றார். 1911- 1918 இடைப்பட்ட காலத்தில்தான் இவரால்
வேத கணிதம் மறு-உருவாக்கம் பெற்றது.
For More info visit : www.vedic-maths.in
ReplyDeleteநன்பர்.....அவர்களுக்கு....நீங்கள் தம்முடைய படைப்பை வெளியிட்டதிற்கு நன்றி....ஆனால் எம்முடைய தளத்தின் முகவரியையும் கொடுத்திருந்தால் அனைவருக்கும் பயன்பட்டிருக்கும் அல்லவா? தங்களுடைய Blog சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி
தே. அன்பழகன்
www.vedic-maths.in